தமிழ்நாடு
சென்னையில் 3 மணி நேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை
கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்ததன் காரணமாக சென்னையில் தற்போது குளிர்ச்சியான தட்பவெப்பநிலை உள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் வெப்பம் உள்பட அதிக வெப்பத்தை கடந்த சில நாட்களாக சந்தித்த பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மழை காரணமாக ஏற்பட்டுள்ள தட்பவெட்பநிலை மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இருப்பினும் நேற்று பெய்த மழை காரணமாக சாலையின் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும் அந்த நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் விடிய விடிய ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இன்னும் 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.