Connect with us

தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின்: அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

Published

on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஏற்கனவே அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் பேரறிவாளனுக்கு அடுத்தடுத்து ஒவ்வொரு மாதமாக பரோல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 30 ஆண்டுக்கு மேல் சிறையிலுள்ள பேரறிவாளனின் உடல் நிலை, கல்வி நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து இதே வழக்கில் சிறையில் உள்ள மற்றவர்களுக்கும் ஜாமீன் வழங்க வாய்ப்பு இருப்பதாக பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு என்பவர் பேட்டி அளித்துள்ளார் .

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஜாமீன் வழங்கியது நீதிக்காக போராடும் ஊக்கமளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?