தமிழ்நாடு
பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின்: அரசியல் தலைவர்கள் வரவேற்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஏற்கனவே அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில் பேரறிவாளனுக்கு அடுத்தடுத்து ஒவ்வொரு மாதமாக பரோல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 30 ஆண்டுக்கு மேல் சிறையிலுள்ள பேரறிவாளனின் உடல் நிலை, கல்வி நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து இதே வழக்கில் சிறையில் உள்ள மற்றவர்களுக்கும் ஜாமீன் வழங்க வாய்ப்பு இருப்பதாக பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு என்பவர் பேட்டி அளித்துள்ளார் .
பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஜாமீன் வழங்கியது நீதிக்காக போராடும் ஊக்கமளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .