Connect with us

தமிழ்நாடு

ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பு: ஒற்றை தலைமை விவகாரம் முடிவுக்கு வருமா?

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்னும் சில நிமிடங்களில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்து வருகிறது என்பதும் ஒற்றை தலைமையை பிடிப்பதற்காக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டது.

மேலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும், பத்திரிகைகளில் பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது இந்த விவகாரம் உச்ச கட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி அதிமுக அலுவலகத்தில் இன்று காலை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இதில் ஒரு சில தொண்டர்களுக்கு இரத்த காயம் ஏற்பட்டதால் அதிமுக அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஒற்றை தலைமை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது ஒற்றை தலைமை விவகாரம் முடிவுக்கு வருமா? அல்லது இரட்டை தலைமையை தொடருமா அல்லது ஒற்றை தலைமையை ஒருவர் விட்டுக் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?