Connect with us

தமிழ்நாடு

1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை: தேர்வு உண்டா?

Published

on

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கிய நிலையில் விரைவில் 10, 11-ம் வகுப்பு தேர்வு தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் அதுவரை பள்ளிகள் செயல்படும் என்றும் மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறையின் உத்தரவின்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் அதுவரை வகுப்புகளுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவித்துள்ளது. இதுபற்றி பள்ளிக்கல்விதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி வாரியப்‌ பாடத்திட்டத்தைப்‌ பின்பற்றும்‌ அனைத்து வகைப்‌ பள்ளிகளில்‌ ஒன்று மூதல்‌ ஒன்பதாம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்‌ தேர்வுகள்‌ நடத்துவதற்கான கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்‌ கோடை வெயிலின்‌ தாக்கம்‌ அதிகமாவதனால்‌ மாணவர்களின்‌ நலன்‌
கருதியும்‌ தேர்வுகளுக்கு சிறந்த முறையில்‌ தயாராவதற்கும்‌ ஏதுவாக இனிவரும்‌ நாட்களில்‌ நடக்க இருக்கும்‌ ஆண்டு இறுதித்‌ தேர்வுகள்‌ அன்று தேர்வு எழுதும்‌ அரைநாள்‌ மட்டும்‌ பள்ளிக்கு வருவர்‌.

ஏற்கெனவே அந்தந்த மாவட்டங்களில்‌ 1 முதல்‌ 9 வகுப்புகள்‌ வரை இறுதித்‌ தேர்வுகளுக்கு மாவட்ட முதண்மைக்‌ கல்வி அலுவலர்களால்‌ அறிவிக்கப்பட்ட நாட்களில்‌ மட்டும்‌ தேர்வுகள்‌ நடைபெறும்‌. பிற நாட்களில்‌ வகுப்புகள்‌ ஏதும்‌ நடைபெறாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?