சினிமா செய்திகள்
ஏன்மா யாஷிகா பேண்ட் வாங்க கூட காசு இல்லையா? கமெண்டில் கலாய்த்த ரசிகர்கள்!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த், அதன் பின்னர் பிக்பாஸ் இரண்டாம் சீசனில் போட்டியாளராக வலம் வந்து தமிழக ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வரிசையாக படங்கள் வரும் என எதிர்பார்த்த யாஷிகாவுக்கு மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த அதே ஏமாற்றமே மிஞ்சியது.
ஆனாலும், யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் படு பிசியாகவும் ஜாலியாகவும் இருந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
முழு நீள ஜிப் கொண்ட ஆடையை அணிந்து கொண்டு யாஷிகா அந்த போஸை கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஏன்மா பேண்ட் வாங்க கூட காசு இல்லையா? இதுக்குத்தான் பிக்பாஸ்க்கு போகாதான்னு கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.
யாஷிகா ஆனந்த் நடிப்பில் வெகுநாட்களாக உருவாகி வரும் ஜாம்பி படம் தான் இப்போதைக்கு யாஷிகா அனந்தின் ஒரே நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.




















