Connect with us

தமிழ்நாடு

3 நாட்களாக மின்சாரம் இல்லை: மந்தைவெளி மக்கள் ஆவேசம்

Published

on

சென்னையில் உள்ள மந்தைவெளி பகுதியில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை என்றும் தண்ணீர் தேங்கி இருப்பதால் மின்சார பணிகள் நடைபெறவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதன் காரணமாக பாதுகாப்பு கருதி மின்சாரத்தை மின் வாரிய அதிகாரிகள் தடை செய்துள்ளனர். இதன் காரணமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவஸ்தையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பகல் நேரத்திலும் விட்டுவிட்டு தான் மின்சாரம் வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் ஐடி ஊழியர்கள் பெரும் அவஸ்தையில் உள்ளனர்.

இந்த நிலையில் மந்தைவெளி பகுதியில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை என்றும் தண்ணீர் அடைத்துக்கொண்டு டாய்லெட் கூட போக முடியவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகளுக்கு போன் செய்தால் தண்ணீர் தேங்கி இருப்பதால் தங்களால் தோண்டி பணி செய்ய முடியாது என்றும் மழை நின்று தண்ணீர் சென்றவுடன் தான் பணி செய்ய முடியும் என்று பதில் கூறுவதாக கூறுகின்றனர்.

சென்னையில் மின்சாரம் தொடர்ச்சியாக கிடைக்க செய்ய வேண்டியது மின் வாரிய அதிகாரிகளின் பணியாக இருக்கும் போது அவர்கள் அசட்டையாக பதில் கூறுவதாகவும் பொதுமக்கள் ஆவேசத்துடன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோக்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?