இந்தியா
இந்த ஆண்டும் ஏமாற்றம்: வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை!
கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரி உச்ச வரம்பு 2.5 லட்சமாக இருந்து வரும் நிலையில் இந்த உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என மாதச் சம்பளதாரர்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்படுவது.
கடந்த ஆண்டு வருமான வரி உச்சவரம்பு 3 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டும் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.50 லட்சம் என்பதே தொடரும் என்றும், நாட்டின் நன்மை கருதி இந்த முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வருமான வரி உச்சவரம்பு ரூ 3 லட்சம் அல்லது 4 லட்சம் என உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மாற்றம் இல்லை என்பது வருமான வரி கட்டுபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.