இந்தியா
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண்… மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ…
ஓடும் ரயிலில் ஏறுவதோ, இறங்குவதோ தவறானது மட்டுமில்லாமல் உயிர் பலியையும் ஏற்படுத்திவிடும். இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்துள்ளது. அதேபோல், மயிரிழையில் பலரும் உயிர் தப்பியும் உள்ளனர். ஓடும் ரயிலில் ஏறும் மற்றும் இறங்கும் பயணிகளை ரயில்வே பாதுகாப்பு போலீசார் காப்பாற்றும் வீடியோக்கள் இதற்கு முன்பு வெளியாகியுள்ளது.
தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா கல்யாண் ரயில்வே நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து ஒரு பெண் இறங்கமுயன்றார். அப்போது அவர் தண்ட வாளத்தில் கீழே விழுப்போனார். அப்போது ஓடி வந்த ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ஓடும் இரயிலில் ஏறவோ, இறங்கவோ செய்ய வேண்டாம்’ என பயணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
सतर्क आरपीएफ ने बचाई एक बहुमूल्य जान!
महाराष्ट्र के कल्याण स्टेशन पर महिला यात्री चलती ट्रेन से उतरने का प्रयास करते हुए संतुलन खो बैठी जिसे सर्तक आरपीएफ़ स्टाफ द्वारा त्वरित कार्यवाही करते हुए बचाया गया।
यात्रियों से अनुरोध है कि चलती ट्रेन में चढ़ने या उतरने का प्रयास न करें। pic.twitter.com/8Zu2ZapUGH
— Ministry of Railways (@RailMinIndia) October 1, 2021