இந்தியா
இந்தியாவில் குறைந்த வரும் கொரோனா… நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்….
கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது.எனவே, இந்தியாவில் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு உள்ளிட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன் தினம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 439 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு, 2,43,495 பேர் சிகிச்சையில் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர்.
இந்நிலையில், நேற்று முன் தினத்தை ஒப்பிடும் போது கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 614 பேர் உயிரிழந்துள்ளனர். இது நேற்று முன் தினத்தை ஒப்பிடும் போது 50 ஆயிரம் பேர் குறைவாக உள்ளது. அதேபோல் நேற்று ஒரேநாளில் 2,67,753 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.