Connect with us

தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த தங்கையை வீட்டுக்கு அழைத்து கொலை செய்த அண்ணன்: கும்பகோணத்தில் பரபரப்பு

Published

on

காதல் திருமணம் செய்த தங்கையை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன் தலைமறைவாகி உள்ளதை அடுத்து கும்பகோணம் அருகே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அருகே சரண்யா என்பவருக்கு அவரது அண்ணன் சக்திவேல் என்பவர் உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். ஆனால் சரண்யா சென்னையில் உள்ள மோகன் என்பவரை காதலித்து நிலையில் திடீரென வீட்டில் இருந்து வெளியேறி மோகனை திருமணம் செய்துகொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணன் சக்திவேல் உனது நகைகள் வங்கியில் அடமானம் இருக்கிறது என்றும் நீ வந்தால் தான் அதை மீட்க முடியும் என்றும் அதனால் வீட்டுக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்ணனை நம்பி கணவருடன் வீட்டுக்கு வந்த சரண்யாவை வங்கிக்கு அழைத்துச் சென்று நகைகளை மீட்ட பின் அவரையும் அவரது கணவர் கணவர் மோகனையும் வெட்டி கொலை செய்தார். இதற்கு சரண்யாவை திருமணம் செய்ய இருந்த ரஞ்சித் என்பவரும் உடந்தை என தெரிகிறது.

இந்த நிலையில் சரண்யா மற்றும் அவரது கணவரை கொலை செய்த சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் தலைமறைவாகி உள்ளதாகவும் இருவரையும் போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணம் ஆன ஒரே வாரத்தில் புதுமணத்தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?