இந்தியா
இந்தியாவில் இரண்டு லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று மட்டும் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இந்த நிலையில் இன்று இரண்டு லட்சத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனால் இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் சுமார் 2 லட்சம் அதாவது 1,98,000 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவில் கொரனோ வைரஸ் இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் முதல் அலையைவிட இரண்டாவது மோசமாக இருப்பதால் மத்திய மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் கொரோனாவால் இதுவரை பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,070,890 எனவும், இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 173,152 எனவும், குணமானோர் எண்ணிக்கை 12,426,146 எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



















