சினிமா செய்திகள்
வெளி இயக்குனர்கள் படங்களில் நடிப்பது இல்லை: நயன்தாரா அதிரடி முடிவு?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிக்க இருப்பதாக நயன்தாரா அறிவித்திருந்த போதிலும் வெளி இயக்குனர்கள் படங்களில் நடிப்பதில்லை என்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களில் மட்டுமே அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை வேறு இயக்குனர்கள் படங்களில் வாய்ப்பு வந்தால் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாநாயகன் இல்லாத படத்தில் மட்டுமே நடித்து அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா தான் நாயகி என்றும் அதன் பிறகு நயன்தாராவுக்காகவே ஸ்பெஷல் கதைகளை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் அந்த படங்கள் அனைத்திலும் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இனிமேல் வெளி இயக்குநரின் படங்களில், வேறு நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நயன்தாரா நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுவதால் நயன்தாராவின் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.