தமிழ்நாடு
மனைவியின் தங்கையை கதற கதற….. மைனர் பெண்ணிடம் புதுமாப்பிள்ளை வக்கிரம்!
13 வயதே ஆனா மனைவியின் தங்கை மீது மோகம் கொண்ட அஜித்குமார் என்பவர் அவரை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வக்கிரம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதனையடுத்து அஜித்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே உள்ள எருக்குவாய் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பெரியபாளையம், தேர்வழி கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் கடந்த மாதம் பிப்ரவரி 15-ஆம் தேதி தான் நடந்தது. புதுப்பெண்ணுக்கு 13 வயதில் ஒரு தங்கை இருக்கிறார். அஜித்குமார் மாமனார் வீட்டில் இருக்கும் போது தனது மனைவியின் தங்கையான 13 வயது சிறுமியை தனது வலையில் வீழ்த்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அந்த 13 வயது சிறுமி திடீரென காணாமல் போயிருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் கடந்த 27-ஆம் தேதி சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசார் சந்தேகத்தின் பேரில் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில், அஜித்குமார் தனக்கு சொந்தமான செல்போன் கடையில் சிறுமியை அடைத்து வைத்துள்ளது தெரியவந்தது.
13 வயதே ஆன தனது மைத்துனியை அஜித்குமார் செல்போன் கடையில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் புதுமாப்பிள்ளை அஜித்குமார்.