Connect with us

தமிழ்நாடு

மனைவியின் தங்கையை கதற கதற….. மைனர் பெண்ணிடம் புதுமாப்பிள்ளை வக்கிரம்!

Published

on

13 வயதே ஆனா மனைவியின் தங்கை மீது மோகம் கொண்ட அஜித்குமார் என்பவர் அவரை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வக்கிரம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதனையடுத்து அஜித்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே உள்ள எருக்குவாய் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பெரியபாளையம், தேர்வழி கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் கடந்த மாதம் பிப்ரவரி 15-ஆம் தேதி தான் நடந்தது. புதுப்பெண்ணுக்கு 13 வயதில் ஒரு தங்கை இருக்கிறார். அஜித்குமார் மாமனார் வீட்டில் இருக்கும் போது தனது மனைவியின் தங்கையான 13 வயது சிறுமியை தனது வலையில் வீழ்த்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அந்த 13 வயது சிறுமி திடீரென காணாமல் போயிருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் கடந்த 27-ஆம் தேதி சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசார் சந்தேகத்தின் பேரில் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில், அஜித்குமார் தனக்கு சொந்தமான செல்போன் கடையில் சிறுமியை அடைத்து வைத்துள்ளது தெரியவந்தது.

13 வயதே ஆன தனது மைத்துனியை அஜித்குமார் செல்போன் கடையில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் புதுமாப்பிள்ளை அஜித்குமார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?