Connect with us

தமிழ்நாடு

இன்று முதல் மருத்துவக்கல்லூரி திறப்பு: சில மாணவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த முறை முதல்வர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது ஆகஸ்ட் 16 முதல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை முதல் மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டது. மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளுக்கு நீண்ட இடைவேளைக்குப்பின் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியபோது ’மருத்துவ கல்லூரிகள் மீண்டும் முழுமையாக செயல்பட தொடங்கி உள்ளன என்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் பெரும்பாலான மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்றும் எல்லா மாணவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் பரிசோதனைகள் முடிவுகள் வரும்வரை சில மாணவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்திய சுகாதார செயலாளர், கடந்த இரண்டு வாரங்களாக இரண்டாயிரத்துக்குள் தான் தினசரி கொரோனா பாதிப்பு இருப்பதால் தமிழகத்தில் கொரனோ வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?