சினிமா செய்திகள்
’மாஸ்டர்’ பட நடிகையை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்: நடிகையின் ரியாக்சன் என்ன தெரியுமா?
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகையை மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் படுக்கைக்கு அழைத்ததாகவும் அதற்கு அந்த நடிகையின் ரியாக்சன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகை சௌந்தர்யா, மாஸ்டர் திரைப்படத்தில் பேராசிரியையாக ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் படுக்கைக்கு வர தயாரா என்றும் அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் என்றும் கூறியிருந்தார்
இதனை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நடிகை சௌந்தர்யா இவரைப்போன்ற பேராசிரியர்கள் இருக்கும் கல்லூரியில் உள்ள மாணவிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அந்த மாணவிகளுக்கு ஒன்றும் ஏற்படாது என்று நான் நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரது பதிவிற்கு வரவேற்பு குறைந்து வருகிறது.