ஆன்மீகம்
செப்டம்பர் 7, 2025 சந்திர கிரகணம் – இந்தியாவில் முழுமையாகத் தெரியும்! நேரம், சிறப்பு, செய்யவேண்டியவை & தவிர்க்க வேண்டியவை!

செப்டம்பர் 7, 2025 சந்திர கிரகணம் – முழு விவரங்கள்
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 7, 2025 அன்று நிகழ இருக்கிறது. இதன் கால அளவு சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.
இந்த கிரகணத்தின் சிறப்பு என்னவென்றால், இது இந்தியாவில் முழுமையாகத் தெரியும். எனவே, இந்த நாளில் சூதக்காலம் (Sutak) கடைபிடிக்கப்படுகிறது.
🕰️ கிரகண நேரம் (Timings)
தொடக்கம்: காலை 9:56:08 மணி
முடிவு: நள்ளிரவு 1:26:08 மணி
முக்கிய கிரகண தொடக்கம்: இரவு 8:00 மணி
அந்த நேரத்தில் நிலவு ரத்த கலர் (Blood Moon) போல சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
🌑 சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது?
பூமி சூரியனை சுற்றியும், சந்திரன் பூமியை சுற்றியும் வரும் போது, சில நேரங்களில் சூரியன் – பூமி – சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய ஒளி சந்திரனை நேரடியாகத் தாக்காது. அந்த நேரத்தில்தான் சந்திர கிரகணம் நிகழ்கிறது.
🚫 கிரகணத்தின் போது தவிர்க்க வேண்டியவை
எதிர்மறை ஆற்றல் அதிகரிப்பதால் பகவானை நினைத்து வழிபட வேண்டும்.
பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
உணவு சமைக்குதல், காய்கறி நறுக்குதல், உணவு உண்ணுதல் கூடாது.
கர்ப்பிணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கத்தி, கத்தரிக்கோல், கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.
ஊசி-நூல் வேலை, தையல் போன்றவை கூடாது.
✅ கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை
உணவு மற்றும் தண்ணீரில் தர்ப்பை அல்லது துளசி இலை போட வேண்டும்.
ஸ்தோத்திரங்கள் சொல்லி கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்.
அதிக நேரத்தை தியானம் மற்றும் வழிபாட்டில் செலவிடுதல் நன்மை தரும்.
கிரகணம் முடிந்தவுடன் வெள்ளைப் பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.





















