Connect with us

தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: என்ன சொன்னார் ஆளுனர்? அமைச்சர் ரகுபதி பேட்டி!

Published

on

ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கவர்னரை சந்தித்த அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக சட்டமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டது என்பதும் இந்த மசோதா கவர்னரின் கையெழுத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த மசோதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலாவதி ஆன நிலையில் கவர்னர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கவர்னரை இன்று காலை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்து உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

குறித்த காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என எந்த காரணமும் கிடையாது என்றும் ஆளுநர் விரைந்து இதுகுறித்து முடிவு எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் கொடுத்தால் உடனடியாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வரும் என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.

மேலும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ரம்மி விளையாட்டுக்களில் வித்தியாசம் உண்டு என்றும் ஆஃப்லைனில் விளையாடிய யாரும் இதுவரை தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அமைச்சர் ரகுபதி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

மேலும் ஆளுநர் ரவி அவர்களிடம் ஆன்லைன் ரம்மி மசோதா குறித்த கேள்விகளுக்கு நேரில் விளக்கம் அளித்துள்ளோம் என்றும் ஆன்லைன் ரம்மியால் மக்களின் பணம் பறி போய் விடுகிறது என்றும் அதுமட்டுமின்றி விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகிக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளோம் என்றும், எனவே இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பார் என நாங்கள் நம்புகிறோம் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இதனை அடுத்து ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து விரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?