Connect with us

தமிழ்நாடு

முதல்வர் நீண்ட விளக்கம் அளித்த போதிலும் கஸ்தூரியின் டுவிட் தேவையா? நெட்டிசன்கள் கண்டனம்

Published

on

விருதுநகர் அருகே பெண் ஒருவர் 8 பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் முதல்வர் இன்று சட்டமன்றத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்த புகார் வந்தவுடன் வழக்குப்பதிவு செய்து 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 4 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்

குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தனி நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். விரைந்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும். அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு பொள்ளாச்சி வண்ணாரப்பேட்டை பாலியல் வழக்கு போலல்லாமல் விருதுநகர் வழக்கில் விரைந்து தண்டனை வாங்கி கொடுப்பதில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன் மாதிரியாக இருக்கும் என்றும் இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள் விருதுநகர் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்? பெண்ணின் மானம் காக்க கூட கட்சி பார்த்துதான் குரல் கொடுப்பீர்களா? ராகவன் ஜாதியை இழுத்தவர்கள் எங்கே, ஹரிஹரன், ஜூனைத் அஹமது , மாடசாமி முதலானோரின் சமூகத்தை பேசுங்க பாப்போம்? #expected

முதல்வர் இந்த அளவுக்கு விளக்கமளித்த பின்னரும் இந்த டூயட் தேவையா என நெட்டிசன்கள் கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?