Connect with us

விமர்சனம்

தெலுங்கு படத்தை நேரடியா தமிழில் எடுத்தால் எப்படியிருக்கும் – கார்த்தியின் சுல்தான் – விமர்சனம்!

Published

on

சென்னைக்கு ஒரே ஒரு ரவுடியாக இருக்கும் நெப்போலியனிடம் ‘தங்கள் ஊரில் விவசாயம் செய்யவிடாமல் ஒரு ரவுடி கும்பல் மிரட்டுகிறது. அதன் தலைவனை கொலை செய்து எங்களை விவசாயம் பாக்க உதவ வேண்டும்’ என்று கேட்டு வருகிறார்கள் ஐந்து விவசாயிகள். அதற்கு நெப்போலியனும் எப்போதாவதுதான் நல்லது செய்ய வாய்ப்பு கிடைக்கது. நிச்சயம் நாங்க வந்து அந்த ரவுடி கும்பலை விரட்டி அடித்து உங்களை விவசாயம் பாக்க வைப்போம். இது சத்தியம்னு ஒரு சத்தியம் பண்ணிடுறார்.

இதற்கு முன்னாள் அதாவது 1987-இல் நெப்போலியனின் நிறைமாத கற்பிணி மனைவி வீட்டில் இருக்கும் ரவுடி கும்பல்களுக்கு எல்லாம் சோறு போட்டுக்கொண்டிருக்கும் போது உங்களைப் போல என் மகன் ரவுடியாக வரமாட்டான். படிச்சு பெரிய ஆள் ஆகி உங்களையும் ரவுடித் தொழில் செய்யவிடமாட்டான் என்று வயித்தில் இருக்கும் குழந்தையிடம் சத்தியம் வாங்கிவிட்டு அந்தக் குழந்தை பிறந்ததும் இறந்து விடுகிறார்.

பிறந்த குழந்தை (அவர் தான் கார்த்தி) அம்மா ஆசைப்படி படித்து பெரிய ஆள் ஆகி ஜப்பான் போய் ரோபோ செய்யும் கடை வைக்கும் அளவுக்கு பெரிய படிப்பு எல்லாம் படிச்சு ஊருக்கு வரும் போது நெப்போலியன் எதிர்பாராத விதமாக இறந்து போக (அம்மா சத்தியம் தான் முதல் சத்தியம்) அப்போது சென்னைக்கு புதிதாக வந்த கமிஷ்னர் இருக்கும் ரவுடிகளை சுட்டுக்கொன்று சென்னையை புனித பூமியாக மாற்ற நினைப்பதை தெரிந்து கொண்டு அவரிடம் சென்று ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்க. நான் இவங்களை எல்லாம் நல்லவங்களா மாத்துறேன். இல்லைன்னா இவங்களை கொன்றுடுங்கனு ஒரு சத்தியம் செய்கிறார்.

இப்படி பல்வேறு சத்தியத்துக்கு மத்தியில் தன்னுடைய அப்பா செய்த முதல் சத்தியத்தை நிறைவேற்ற சேலத்தில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு செல்லும் கார்த்தி தன் அப்பா சத்தியம், அம்மா சத்தியம், தன்னுடைய சத்தியம், நாயகி ரஷ்மிகா மந்தனா சத்தியம் (இருக்கு பின்னாடி சொல்றேன்) இப்படி ஒரு ஆறு ஏழு சத்தியங்களை நாலு சண்டை, நாலு பாடல், கொஞ்சூண்டு காதல், ஆங்காங்கே தேவைக்கு ஏற்ப செண்டிமெண்ட், தேவைக்கு அதிகமாகவே விவசாயம் பற்றிய பரப்புரைன்னு கலந்து கட்டி அடித்திருக்கிறார் இந்த சுல்தான்… கதை இதுதான். புரிஞ்சா?

முழு மசாலாப்படம்… தெலுங்கு படம் போல இல்லை… அதற்கு டப் பைட் கொடுக்கும் ஒரு மசாலா பாடத்தை கொடுக்கத் திட்டமிட்டே தான் பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்திற்கு பிள்ளையார் சுழியே போட்டிருப்பார் போல. அது அப்படியே படமாக்கியிருக்கிறார். பாக்கும் நாம் தான் ஐயோ பாவம் என்றாகிவிடுகிறோம். அம்மா, அக்கா, தங்கச்சி, ஒட்டு மொத்த குடும்ப செண்டிமெண்ட் என்று முன்னெல்லாம் கமர்சியல் சினிமாக்களுக்கு ஒரு ஒன்லைன் இருக்கும் இல்லையா? இப்போ அது விவசாய செண்டிமெண்ட் என்று வைத்துக்கொண்டார்கள் போல. யப்பா சாமிகளா நாங்க மட்டுமில்ல விவசாயமே பாவம் தான். ப்ளீஸ் விட்டுடுங்க. ஒட்டுமொத்தமா திரை முழுக்க ஒரு நூறு பேர் வந்துட்டு போறாங்க. அவங்களை கையாண்ட விதம், சண்டைக்காட்சிகள் இவை மட்டும் தான் இந்தப் படத்தில் இயக்குநர் சிறப்பா பண்ணியிருக்கிறார். படத்தை இயக்கும் போதே இதை மட்டும் சரியா செய்துட்டா போதும்னு நினைத்திருப்பார் போல. அதனால் தான் அதை மட்டும் சரியா செய்துட்டார். இதேபோல கொஞ்சம் டைம் எடுத்துக்கூட மற்ற விஷயங்களிலும் கவனம் வைத்திருக்கலாம்.

கடைகுட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு விவசாயத்தை வைத்து ஒரு படம். அதில் குடும்பம், இங்கே கும்பல் அவ்வளவு தான். படம் முழுக்க கார்த்தி விவசாயம், நல்லவங்களா வாழனும்னு வந்து பேசிட்டே இருக்கிறார். இந்த பாத்திரத்தில் கார்த்தி ஒட்டவே இல்லை. சண்டை காட்சிகள், ரஷ்மிகா உடன் உருகும் சில காட்சிகளில் மட்டும் கவர்ந்துள்ளார் கார்த்தி. வழக்கம்போல நல்ல கதையை இந்த இடைவெளியை பயன்படுத்து தேர்வு செய்து நமக்கு கொடுப்பார் என கார்த்தியை நம்புவோம்.

ரஷ்மிகாவுக்கு முதல் தமிழ் படம். அவங்க இடையை காட்டிய அளவு கூட நடிப்பில் கொஞ்சம் கவனம் காட்டவில்லை. நடிப்பில் காட்டிய கவனத்தை கூட இதழ் அசைவில் காட்டவில்லை. தமிழில் படம் நடிக்கிறோம், அதுவும் கார்த்தியுடன் என்றதும் வந்துவிட்டு சென்றுவிட்டார் போல. நடிக்க வாய்ப்பு இருந்தும் அவரது முகம் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது. எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருக்கிறார். உங்களுக்கே இவ்ளோ ரசிகரா என்ற சந்தேகம் வருகிறது.

இசை பாடல்கள் எல்லாம் விவேக் மெர்வின், பின்னணி இசை யுவன்சங்கர் ராஜா… இங்கையும் போய் நாம ஒரு தெலுங்குப்படம் மாதிரி ஒரு படம் எடுக்கப் போகிறோம்’ என்று சொல்லியிருப்பார் போல. தேவி ஸ்ரீபிரசாத் மாதிரி பின்னி எடுத்துவிட்டார்கள். காது இப்போதுவரை கொய்ங்ங்னு சொல்லுது. யுவன் நீங்களுமா என்று சொல்லும் அளவுக்கு பின்னணியை கிழித்துவிட்டார். முடியலை ரகம் தான்.

நகைச்சுவைக்காக சதீஷ், யோகி பாபுன்னு யோசிச்சுருப்பார் போல. ஒர்க் அவுட் ஆகாத சதீஷை முதல் பாதியின் தொடக்கத்தில் கழட்டிவிட்ட இயக்குநர் யோகி பாபுவை மட்டும் கடைசி வரை வைத்து நமக்கு கடும் சோதனை காட்டுவிட்டார். யோகி பாபு அடிப்பதெல்லாம் காமெடி என்று நம்புவதை எப்போதுதான் கைவிட்டு வெளியில் வருவாரோ தெரியவில்லை.

படத்தின் ஒரே ஆறுதல் சத்யம் சூரியனின் ஒளிப்பதிவு. அத்தனை பேரையும் ஒரு திரைக்குள் ஒரு பிரேமுக்குள் அட்டகாசமாக கொண்டு வந்திருக்கிறார். சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், காய்ஞ்சு போன அந்த கிராமமும் அழகாக அவரது கேமரா மூலம் கடத்தப்பட்டு நமக்கு வந்திருக்கு.

வழக்கமான கமர்சியல் படம் தான். யூகிக்க கூடிய காட்சிகள் தன். அதே விவசாய செண்டிமெண்ட் தான் என்றாலும் சண்டைக் காட்சி, ஆங்காங்கே சில காதல் காட்சிகள் என மொத்தம் 2 மணி நேரம் 15 நிமிடம் நம்மை உக்கார வைத்திருக்கிறார். டிக்கெட் வாங்கிவிட்டோமே என்று உக்காந்திருந்தாலும் அந்த விவசாயி அப்படின்ற செண்டிமெண்ட் அறுவையை பொறுத்துக்கொண்டால் நமக்கு ஒரு நல்ல தெலுங்கு பாணியிலான சண்டை படம் பார்க்கக் கிடைக்கும்…

அலோ ரஷ்மிகா என்ன சத்தியம் பண்ணுனாங்கனு போய் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். எல்லாத்தையும் சொல்லிட்டு இருப்பாங்க. அது சஸ்பெண்ஸ். ஆனால், படத்தில் சஸ்பெண்ஸ் என்பது எல்லாம் ஏதும் இல்லை. ஒரு பத்து நிமிடம் படம் பார்த்ததுமே அடுத்து என்ன அடுத்து என்னன்னு நீங்களே சொல்லிடுவிங்க. அந்த பத்து நிமிடத்திற்காக படத்தை பார்க்கணுமா என்னன்னு நீங்களே யோசிச்சுக்கோங்க…

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Fg on ondo killings : we’ve traced owo killings to islamic state west african province (iswap) infinity loaded. Reducing overhead costs and expanding the talent pool are major advantages of remote work. The rbi usually releases the admit card a week before the exam date, so it is highly probable that the admit card will be released at the end of this month.