தமிழ்நாடு
நீங்கள் விவசாயி என்றால் நான் அமெரிக்க அதிபர்: கமல்ஹாசன்

நீங்கள் விவசாயி என்றால் நான் அமெரிக்க அதிபர் என கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார மேடையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் ’ஒருவர் தான் விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் விவசாயி என்றால் நான் அமெரிக்க அதிபர் என்று கூறுவேன் என்று கூறியுள்ளார்
மேலும் தப்பு தப்பாக திருக்குறளை கூறிவிட்டால் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்க வேண்டாம் என்றும் தப்புத்தப்பாக திருக்குறளை கூறினால், மார்க்குதான் போடுவோம் ஓட்டு போட மாட்டோம் என்றும் அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக சாடினார்.
சில ஆண்டுகளுக்கு முன் பிரச்சாரம் செய்தால் எனக்கு நூறு கோடிகள் கொடுக்க ஒரு கட்சியினர் தயாராக இருந்தார்கள் என்றும் ஆனாலும் நான் அதற்கு ஆசைப்படவில்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தை முன்னேற்ற தான் பல திட்டங்களை வைத்திருப்பதாகவும் தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக தமிழகத்தை முன்னேற்றுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.























