Connect with us

தமிழ்நாடு

ஜனவரி 2ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Published

on

டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதேசி சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் அன்றைய தினம் அதிகாலையில் திறக்கப்படும் சொர்க்கவாசலை பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில் ஜனவரி 2ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 3:45 பெருமாள் புறப்பாடு நடக்கும் என்றும் 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சொர்க்க வாசல் தரிசனம் செய்வதற்கு வசதியாக ஜனவரி 2ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 7ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?