சினிமா
வரி ஏய்ப்பு செய்தாரா நடிகர் விஜய் சேதுபதி?: அதிகாரிகள் எடுத்த முடிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதாக நேற்று தகவல் பரவியது. இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் சேதுபதிக்கு பல வருடங்களுக்கு கால் ஷீட் புக் ஆகிவிட்டது. ஓய்வே இல்லாமல் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு அடிக்கடி படங்கள் வெளியாகின்றன. அவரது படங்களும் நல்ல வசூலை அள்ள தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார்.
நடிகர் விஜய்சேதுபதியின் வீடு கீழ்ப்பாக்கத்திலும், அலுவலகம் வளசரவாக்கத்திலும் அமைந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி வரி ஏய்ப்பு செய்ததாக அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த சென்றதாகவும், விஜய் சேதுபதி வெளியூரில் இருப்பதால் வீட்டில் சோதனை நடத்தாமல் திரும்பி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவரது அலுவலகத்தில் ஊழியர்களிடம் மட்டும் விசாரணை நடத்திவிட்டு சில ஆவணங்களுடன் சென்றுவிட்டதாகவும், விஜய் சேதுபதி வந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என வருமான வரித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
ஆனால் இது வருமான வரித்துறை ஆய்வுக்குழுவின் வழக்கமான சோதனைதானே தவிர, வரி ஏய்ப்பு செய்ததற்கான சோதனையும் இல்லை. அதற்கான விசாரணையும் இல்லை என்று விஜய் சேதுபதி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

















