வணிகம்
தமிழ்நாட்டிற்கு வருகிறது இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் வாகன தொழில்துறை பூங்கா.. எங்கு தெரியுமா?

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் வாகன தொழில்துறை பூங்கா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள சூளகிரியில் அமைய உள்ளது.
தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் சிப்காட் மூலம் 300 ஏக்கர் நிலப் பரப்பளவில் பிளக் அண்ட் பிளே வசதியுடன் கூடிய பூங்கா சூளகிரியில் அமைக்கப்படும்.
பிளக் அண்ட் பிளே என்றால் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் தங்களது இயந்திரங்களை அங்குப் பொருத்தி உற்பத்தியைச் செய்துகொள்ளலாம். அதேநேரம் நிறுவனங்களை மூட வேண்டும் என்றால் அதனை அவர்கள் எடுத்துச் சென்றுவிடலாம். கட்டிடம் போன்ற வசதிகளை சிப்காட் வழங்கிவிடும்.

India’s first exclusive industrial park for Electric Vehicle sector coming soon in Hosur
இந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழில்துறை பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஓலா நிறுவனம் இங்குதான் தங்களது எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த தொழில்துறை பூங்காவில் எலக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களது ஆலைகளை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.