சினிமா செய்திகள்
துருவ் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்பதற்காக சும்மா இருக்கேன் – பாலா அறிக்கை!

அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் பாலா, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்கி வந்தார்.
வரும் பிப்ரவரி 14ம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈ4 எண்டர்டெயின்மெண்ட் வர்மா படத்தில் இருந்து இயக்குநர் பாலாவை வெளியேற்றுவதாகவும், அவரது இயக்கத்தில் திருப்தி இல்லை என்றும், மீண்டும் முதலில் இருந்து புதிய இயக்குநர் கொண்டு எடுக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்தது, கோலிவுட்டையே கதிகலங்க செய்தது.
இந்நிலையில், பட தயாரிப்பு நிறுவனம் தவறான அறிக்கை வெளியிட்டதாகவும், கருத்து சுதந்திரம் காரணமாக தாமாக முன்வந்து தான் படத்தில் இருந்து விலகியதாகவும், மேலும், துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி இதற்கு மேல் பேச விரும்பவில்லை என பாலா பதில் அறிக்கை விட்டுள்ளார்.




















