Connect with us

தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அடுத்த சிக்கல்!

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நடந்த போது திமுக தொண்டர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக கூறப்பட்டது. அந்த நபரை அரை நிர்வாணப்படுத்தி ஜெயகுமார் மற்றும் அவரது தரப்பினர் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதுமட்டுமின்றி சாலை மறியல் செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சாலை மறியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. அதனால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் திமுக தொண்டரை அரை நிர்வாணபடுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து மனித உரிமை ஆணையம் விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?