செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராகக் கவுதம் கம்பீர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பொறுப்பைக் கவுதம் கம்பீருக்கு வழங்குவதாக, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். அவரது பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃப்ளெம்மிங் போன்ற பல பெயர்கள் இதில் அடிப்பட்டன.
கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்துவார் என மிகவும் நம்பிக்கையாக உள்ளது என ஜெய் ஷா இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராகக் கவுதம் கம்பீர் சிறப்பாகச் செயல்பட்டு, 2024-ம் ஆண்டு கோப்பையை அந்த அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
Many thanks for your extremely kind words and constant support @JayShah bhai. Elated to be a part of this journey! The entire team together will strive for excellence and newer heights. https://t.co/BgAbTwN59u
— Gautam Gambhir (@GautamGambhir) July 9, 2024


















