Connect with us

இந்தியா

நாடு முழுவதும் பாஸ்டேக் அமல்: சுங்கச்சாவடிகளில் வாக்குவாதம்!

Published

on

நாடு முழுவதும் இன்று அதிகாலை 12 மணி முதல் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதை அடுத்து சுங்கச்சாவடிகளில் சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுங்கச் சாவடியில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படும் என்றும் இந்த முறை வாகனங்களில் இல்லாதவர்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில் பாஸ்டேக் இல்லாதவர்களிடம் இருமடங்கு கட்டணங்களை சுங்கச்சாவடி அதிகாரிகள் வசூலித்ததால் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கு அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று பல சுங்கச்சாவடிகளில் இந்த வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், இரு மடங்கு கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளையாக இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் வாக்குவாதங்கள் செய்து வருகின்றனர்.

இதனால் பல சுங்கச்சாவடிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமன்றி நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு உள்ளது. இதற்கு உடனடியாக மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?