Connect with us

இந்தியா

கணவர், மாமியாரை சரமாரியாக தாக்கிய இளம்பெண்.. காரணத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்..!

Published

on

இளம் பெண் ஒருவர் தனது சகோதரர் மற்றும் பெற்றோரை அழைத்து வந்து கணவர் மற்றும் மாமியாரை சரமாரியாக தாக்கிய நிலையில் இந்த தாக்குதலுக்கு இதுதான் காரணமா என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

மும்பை சேர்ந்த விஷால் நங்ரே என்பவர் கல்பனா என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். விஷால் நங்ரே கூரியர் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக பணிபுரிகிறார் என்பதும் அவரது மனைவி கல்பனா உணவு விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென விஷால் தனது திருமண தினத்தை மறந்து விட்டதாக தெரிகிறது. கல்பனா காலையில் இருந்தே தனது கணவர் தனக்கு திருமண வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் திருமண தேதியை மறந்து விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கல்பனா தனது அம்மா வீட்டிற்கு சென்று பெற்றோர் மற்றும் சகோதரரை அழைத்து வந்து வீட்டில் இருந்த மாமியாரை சரமாரியாக அடித்துள்ளார். அது மட்டும் இன்றி வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் சேதப்படுத்தியதோடு வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளார். அதன் பிறகு மாலை கணவர் வந்தவுடன் கணவரையும் கல்பனா மற்றும் அவரது பெற்றோர் சகோதரர்கள் சரமாரியாக அடித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறையினர் விஷால் நங்ரே இதுகுறித்து புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் கல்பனாவை விசாரணை செய்தனர். அப்போது தனது கணவர் தனது திருமண நாளை மறந்து விட்டதாகவும் தனக்கு வாழ்த்து சொல்லவில்லை என்பதால் தான் அவரை தாக்கினேன் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் மீது காவல்துறையினர் கல்பனா மற்றும் சகோதரர், அவரது பெற்றோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 323, 324, 327, 504 மற்றும் 506 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

திருமண வாழ்த்து கூறுவதை மறந்து விடுவது என்பது சாதாரணமான நிகழ்ந்து விடும் ஒரு நிகழ்வு என்றும் இதற்கு போய் கணவரையும் மாமியாரையும் இப்படி அடிப்பார்களா என்றும் அந்த பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?