சினிமா
பட்டய கிளப்பும் ‘சும்மா சுர்ருன்னு’ – ‘எதற்கும் துணிந்தவன்’ 3வது பாடல் வெளியீடு…

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இடம் பெற்ற வாடா தம்பி என்கிற பாடல் வெளியானது. அதன்பின் ‘உள்ளம் உருகதய்யா’ பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சும்மா சுர்ருனு பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.