வணிகம்
PF பணம் எளிதில் கிடைக்கும் புதிய நடைமுறை: வங்கி விவரங்கள், டாக்குமெண்ட் அப்லோடு தேவையில்லை – EPFO புதிய அறிவிப்பு!

PF ஊழியர்களுக்கு புதிய நற்செய்தி – EPFO நடைமுறையில் முக்கிய மாற்றம்!
இந்திய அரசாங்கம் நிர்வகிக்கும் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், பணிபுரியும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பு முறையாகும். இதில், ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை EPF-க்காக செலுத்துகின்றனர். இந்த தொகையை, தேவைப்படும் போது அவர்கள் கிளைம் செய்து பெறலாம்.
இதுவரை, PF பணத்தை கிளைம் செய்யும் போது, வங்கி கணக்கை உறுதி செய்ய செக் லீஃப் அல்லது பாஸ்புக் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக இருந்தது. தற்போது, EPFO புதிய அறிவிப்பில், இவை அனைத்தும் தேவை இல்லையென கூறப்பட்டுள்ளது.
இதனால், கிளைம் செய்வதில் நேரமும் சிக்கலும் குறையும். மேலும், UAN எண்ணுடன் வங்கி கணக்கை இணைப்பதற்கும், வேலை செய்யும் நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் சோதனை முறையில் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து, அதை முழுமையாக அமல்படுத்த EPFO திட்டமிட்டுள்ளது. இது ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.















