வணிகம்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளை முதல் ரூ.50 உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி: மத்திய அரசு வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை நாளை முதல் (08 ஏப்ரல் 2025) ரூ.50 அதிகரிக்க இருப்பதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சலுகை பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் LPG சிலிண்டர் விலை ரூ.500 லிருந்து ரூ.550 ஆக அதிகரிக்கிறது.
தமிழ்நாட்டில் புதிய விலை:
தற்போது தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.818.50 ஆக உள்ளது. புதிய விலை உயர்வின் படி, நாளை முதல் ரூ.868.50 ஆகும். இது பொதுமக்களின் பாரம்பரிய செலவுகளை மேலும் அதிகரிக்கக்கூடிய ஒரு தீர்மானமாகும்.
பொதுவாக சமையல் எரிவாயு விலைகளில் மாத இறுதியில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை மாதத்தின் ஆரம்பத்திலேயே விலை உயர்வு அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வுக்கான பின்னணி:
இந்த விலை திருத்தம், சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகளின் மாற்றம் மற்றும் மத்திய அரசின் மானிய கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானமாக கூறப்படுகிறது.


















