Connect with us

தமிழ்நாடு

சென்னையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

இந்தியாவில் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் அவ்வப்போது, எலக்ட்ரிக் வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இது, எலக்ட்ரிக் வாகனங்களின் மீது மக்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

மின்சார வாகனம் தீப்பிடிப்பு

தமிழ்நாட்டில் சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வருபவர் வேலு (வயது 38). இவர் வியாசர்பாடியை அடுத்துள்ள முல்லை நகர்ப் பகுதியில் ஸ்டீல் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று காலை அவருடைய கம்பெனியில், அவர் பயன்படுத்தி வரும் மின்சார ஸ்கூட்டரில் சார்ஜ் செய்து கோவிலுக்கு சென்று உள்ளார்.

பின்னர் வீடு திரும்பும் போது முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது மின்சார ஸ்கூட்டரில் இருந்து புகை வருவதை கண்டுள்ளார். உடனே வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு பார்த்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேலு, உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இன்று சென்னையில் நடந்தது போல், இதற்கு முன்னும் ஆங்காங்கே மின்சார வாகனங்கள் தீப்பற்றி எரிவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கானத் தீர்வு இன்னும் கண்டறியப்படாத நிலையில், பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?