Connect with us

தமிழ்நாடு

துணி காயப்போட சென்ற தந்தை, காப்பாற்ற சென்ற இரு மகன்கள் மின்சாரம் தாக்கி பலி!

Published

on

திண்டுக்கல் மாவட்டத்தில் துணி காயப்போட சென்ற நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான நிலையில் அவரை காப்பாற்ற சென்ற அவருடைய இரண்டு மகன்களும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டியபட்டி என்ற பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது மனைவி வசந்தாவை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் துணி காயப்போட சென்றார். அப்போது துணி காயப்போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் அவர் மின்சாரத்தால் தாக்கப்பட்டு அலறினார்.

தந்தையின் அலறல் சத்தம் கேட்ட அவரது இரண்டு மகன்களான சந்தோஷ் குமார் மற்றும் விஜயகணபதி தந்தையை காப்பாற்ற முயன்ற போது அவர்கள் இருவருக்கும் மின்சாரம் பாய்ந்தது. இதனை அடுத்து மூவரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்த முருகன் மற்றும் சூர்யா ஒரு மரக்கட்டையை எடுத்து வந்து மூவரையும் மரக் கட்டையால் அடித்து அடித்தனர். அப்போது ஐந்து பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே துணி காயப்போட சென்ற திருப்பதி மற்றும் அவரது இரண்டு மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகணபதி பலியாகினர். பக்கத்து வீட்டுக்காரர்கள் முருகன், சூர்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக திருப்பதி வீட்டில் உள்ள எலக்ட்ரிக் போர்டு இல் இருந்து துணி காயப் போட கட்டப்பட்டிருந்த கம்பியில் மின்சாரம் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறியாமல் துணி காய போட்டதால் மின்சாரம் ஷாக்கடித்து மூன்று உயிர்கள் பலியாகி உள்ளது அடுத்து அந்த பகுதியை சோகமயமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?