Connect with us

தமிழ்நாடு

ஓட்டு மெஷினில் தில்லுமுல்லு செய்து திமுக ஜெயித்துவிட்டது: ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

Published

on

ஓட்டு மிஷினில் தில்லு முல்லு செய்து திமுக ஜெயித்து விட்டது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்று கூறப்படும் ஓட்டு மிஷினில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாகவும் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்கு ஓட்டு போகும்படி புரோகிராம் செய்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது தோல்வி அடைந்த அரசியல் கட்சிகள் ஓட்டு மிஷின் மீது குற்றம்சாட்டி வருவது வழக்கமாக கொண்டுள்ளனர். ஏற்கனவே பல முறை இதேபோல் திமுகவும் சொல்லி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ள்ஓட்டுப் போடுவதில் திமுக வல்லவர்கள் என்றும் பல வாக்குச்சாவடிகளில் கைப்பற்றி குண்டர்களும் ரவுடிகளும் தான் ஓட்டு போட்டனர் என்று கூறியுள்ளார்.

மேலும் சென்னையில் தான் அதிக கள்ள ஓட்டு போடப் பட்டுள்ளது என்றும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு அதுதான் காரணம் அதிமுக ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக வாக்களித்தார்கள் என்று கூறினார்.

மேலும் வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்துள்ளார்கள் என்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்கு செல்லும்படி புரோகிராம் செய்முறை செய்துள்ளனர் என்றும் தமிழகத்தில் இதுவரை இல்லாத நிலை இந்த தேர்தலில் நடந்துள்ளது என்றும் அதனால்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஈபிஎஸின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?