தமிழ்நாடு
சென்னையில் நிலநடுக்கம்? பீதியில் பொதுமக்கள்…
துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் உலக நாடுகள் அனைத்தையும் கவலையடைய செய்தது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டதையடுத்து பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலை அருகே சில உயரமான கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. ஒயிட்ஸ் சாலையில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் நில அதிர்வை உணர்ந்த ஊழியர்கள் கட்டிடத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினர். அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்தவர்களும் நில அதிர்வை உணர்ந்து தரை தளத்துக்கு விரைந்தனர். ஆனால் இந்த நில அதிர்வு குறித்து தேசிய மையத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
இந்நிலையில் இந்த நில அதிர்வுக்கும் மெட்ரோ பணிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோவின் டுவிட்டர் பக்கத்தில், சென்னை அண்ணா சாலை அருகே உணரப்பட்ட நில அதிர்வுக்கும் மெட்ரோ பணிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த பகுதியில் எந்த மெட்ரோ பணிகளும் நடைபெறவில்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.