தமிழ்நாடு
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியார், மருமகள் வெற்றி!
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியார்-மருமகள் ஆகிய இருவருமே அடுத்தடுத்த வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்று வருகின்றனர்
இந்த நிலையில் விருதுநகரில் 26 வது வார்டில் காங்கிரஸ் சார்பில் சித்தேஸ்வரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு அடுத்தபடியாக 27 வது வார்டில் சித்தேஸ்வரி மாமியார் பேபி போட்டியிட்டு வெற்றி பெற்றார்
இருவருமே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார்-மருமகள் ஆகிய இருவருமே வெற்றி பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.