ஆரோக்கியம்
குழந்தைகளுக்கு கிரீம் பிஸ்கெட் கொடுப்பது ஆபத்து – நிபுணர் எச்சரிக்கை!

குழந்தைகளுக்கு கிரீம் பிஸ்கெட் கொடுப்பது ஆபத்தானது – ஊட்டச்சத்து நிபுணர் எச்சரிக்கை
குழந்தைகளின் ஃபேவரிட் ஸ்னாக்ஸ்களில் ஒன்றாக கிரீம் பிஸ்கெட் கருதப்படுகிறது. ஆனால், பெற்றோர்கள் யோசிக்காமல் வாங்கி தரும் இந்த பிஸ்கெட், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என ஊட்டச்சத்து நிபுணர் எச்சரிக்கிறார்.
அவரது கூற்றுப்படி, கிரீம் பிஸ்கெட்டுகளில் சேர்க்கப்படும் கிரீம் என்பது காய்கறிகளின் கழிவுகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு, சர்க்கரை சிரப், செயற்கை நிறமிகள், கெமிக்கல்கள் மற்றும் preservatives ஆகியவற்றின் கலவையாகும். இதில் சத்துக்கள் எதுவும் இல்லாமல், முழுக்க முழுக்க டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அதிகம் உள்ளது.
கிரீம் பிஸ்கெட்டின் தீங்குகள்:
இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயம் – கிரீமில் உள்ள கெட்ட கொழுப்பு இதயத்தை பாதிக்கும்.
உடல் பருமன் மற்றும் நீரிழிவு – அதிக சர்க்கரை இரத்த சர்க்கரையை திடீரென உயர்த்தி, குழந்தைகளுக்கு obesity மற்றும் diabetes ஏற்படுத்தும்.
கொழுப்பு கல்லீரல் நோய் – சிறுவயதிலேயே fatty liver பிரச்சனை அதிகரிக்கலாம்.
நரம்பு மண்டலம் பாதிப்பு – சேர்க்கப்படும் கெமிக்கல்களால் குழந்தைகளில் எரிச்சல், அதிக சுறுசுறுப்பு (Hyperactivity), ADHD, ஒவ்வாமை, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படும்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவதுபடி, “கிரீம் பிஸ்கெட்டை சுவையாகக் குழந்தைகளுக்கு கொடுப்பது, உண்மையில் அவர்களுக்கே நோய்களை வாங்கித் தருவதைப் போல” என எச்சரிக்கின்றனர்.

















