பர்சனல் பைனான்ஸ்
கிரெடிட் கார்டுகள் மூலம் ரு.1 லட்சம் செலவு செய்தால் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா?
கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேல் செலவு செய்யும் வாடிக்கையாளர்கள் மீது வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கிரெடிட் கார்டு என்பது தற்போது பலரின் தேவையாக உள்ளது என்பதும் கிரெடிட் கார்ட் மூலம் செலவு செய்து விட்டு ஒரு மாதம் கழித்து வட்டி இல்லாமல் அந்த தொகையை செலுத்திக் கொள்ளும் வசதியை பலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் கிரெடிட் கார்டு முலம் செலவு செய்த தொகையை கட்டவில்லை என்றால் அதற்கு வட்டி மேல் வட்டி கட்ட சொல்லி வங்கி நம்முடைய பணத்தை கறந்து விடுவார்கள் என்பதால் கிரெடிட் கார்டை முடிந்தவரை வாங்காமல் இருப்பது நல்லது என்றும் அப்படியே வாங்கினாலும் சரியான தேதியில் செலவழித்த தொகையை கட்டி விட வேண்டும் என்றும் ஆலோசனையாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேல் செலவழித்தால் வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வெகுமதி புள்ளிகள் மற்றும் கேஷ் பேக் மூலம் பலன் பெறுகின்றனர் என்றும் இதனால் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெரிய வர்த்தனைகள் செய்யும் வாடிக்கையாளர்களை கண்காணிக்க வருமானவரித்துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிரெடிட் கார்டு என்பது ஒரு மின்னணு பணம் செலுத்தும் ஊடகம் என்பதால் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் கணினியில் பதிவு செய்யப்படும் என்றும் அதனால் பெரிய பரிவர்த்தனை வருமானவரித்துறைக்கு எளிதில் தெரியும் என்றும் கூறப்படுகிறது. கிரெடிட் கார்டு பில்கள் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேல் தாண்டும் வாடிக்கையாளர்கள் அதேபோல் 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் தாண்டும் வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் விவரங்களை தகவல் தொழில்நுட்பத்துறைக்கு வங்கி அனுப்பும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளால் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வாடிக்கையாளரை அழைத்து விளக்கம் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கிரெடிட் கார்டு மூலம் அதிகமாக செலவு செய்யும் வாடிக்கையாளர்கள் 61 ஏ என்ற விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. கிரெடிட் கார்டு அதிகமாக செலவு செய்பவர்களை வருமானவரித்துறை கண்காணிக்கும் என்பது உண்மைதான் என்றும் கூறப்படுகிறது.