Connect with us

பர்சனல் பைனான்ஸ்

வருமான வரி விலக்கு அறிவிப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னதில் இவற்றை நீங்கள் கவனித்தீர்களா?

Published

on

பட்ஜெட் 2023-2024ஐ புதன்கிழமை தாக்கல் செய்த நிதியமைச்சர், எப்போதும் போலக் கடைசியாக வருமான வரி விலக்கு குறித்த அறிவித்ததுடன் தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.

பட்ஜெட் உரையில் வருமான வரி விலக்கு அறிவிப்பு கடைசியாக வந்தாலும், இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள மாத சம்பள தாரர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருப்பது இதைத்தான். அப்படி பட்ஜெட் 2023-2024ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனிநபர் வருமான வரி குறித்து வெளியிட்ட அறிவிப்பு குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

முதலில் வரி தள்ளுபடி (ரிபேட்)

இப்போது தனிநபர் வருமான வரி வரம்பில் பழைய அல்லது புதிய வருமான வரி முறை என இரண்டிலும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் வரி தள்ளுபடி(ரிபேட்) கிடைக்கும். இப்போது இந்த தள்ளுபடி வரம்பை புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டும் 7 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளனர். அதன்படி, புதிய வருமான வரி முறையைப் பின்பற்றும் போது ஆண்டு வருமான 7 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும் போது வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது புதிய வருமான வரி முறையைப் பலர் பின்பற்ற வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பாகும்.

வருமான வரி வரம்புகள் எண்ணிக்கை குறைப்பு

2020-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் அப்போது புதிய வருமான வரி முறையை அறிமுகம் செய்தார். அதன்படி புதிய வருமான வரி முறையைப் பயன்படுத்துபவர்களுக்கு 6 வருமான வரி வரம்புகள் இருந்தன. அது இப்போது 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே 0-3 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. 3-6 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5 சதவிகித வரி செலுத்த வேண்டும். அதுவும் இப்போது 7 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி உள்ளதால் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.

ஆண்டுக்கு 6 முதல் 9 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் 10 சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும். 7 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி போக 2 லட்சம் ரூபாய்க்கு 10 சதவிகிதம் என 20 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டி வரும். இதுவே 9 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் இருந்தால் 15 சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும். 12 முதல் 15 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானமாக இருந்தால் 20 சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும். 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டும் வருமானம் இருந்தால் 30 சதவிகிதம் வருமான வரியாகச் செலுத்த வேண்டும்.

புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு பெரும் விலக்கு

ரூ.9 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் அதிகபட்சம் 45 ஆயிரம் ரூபாய் மட்டுமே வரியாகச் செலுத்த வேண்டும். இது அவரது வருமானத்தில் 5 சதவிகிதம் மட்டுமே. அதாவது முன்பு இருந்ததை விட 35 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு 60,000 ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டி இருந்தது. அதே போல ஆண்டு வருமானம் 15 லட்சம் உள்ளவர்களுக்கு 1,87,500 ரூபாயிலிருந்து 1.5 லட்சம் ரூபாயாக வரி செலுத்தினால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன்

ஆண்டு வருமானம் 15.5 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக உள்ளவர்கள் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் கீழ் ரூ.52,000 வரி விலக்கு பெற முடியும்.

அதிக வரி வசூலிக்கும் நாடு

இந்தியாவில் அதிகபட்சமாக 42.74 சதவிகிதமாக உள்ள தனிநபர் வருமான வரியை, 37 சதவிகிதமாக இருந்த சர்சார்ஜை 25 சதவிகிதமாகக் குறைப்பதன் மூலம் 39 சதவிகிதமாகக் குறிக்கப்பட்டுள்ளது.

விடுப்பு சம்பளம்

அரசு சாரா நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் விடுப்பு எடுக்காமல் வேலை செய்து ஓய்வு பெறும் போது, அடிப்படை ஊதியமாக 30 ஆயிரம் ரூபாயாக இருந்தால், அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் வரை அதனைப் பணமாகப் பெறலாம். இந்த முறை 2002-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த முறையை அரசு ஊழியர்களுக்கு 25 லட்சம் ரூபாயாக வழங்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

முதன்மை வரி தாக்கல் செய்யும் முறை

மேலும் புதிய வரி தாக்கல் செய்யும் முறையை முதன்மையாகவும், பழைய வரி முறையைத் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்வது போலவும் மாற்றப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

எவ்வளவு வருவாய் இழப்பு?

மேலே கூறியுள்ள அறிவிப்புகளால் அரசுக்கு 35,000 கோடி ரூபாய் வருவாய் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டால் விலை உயரும் பொருட்கள் என்னென்ன? குறையும் பொருட்கள் என்னென்ன?

வேலைவாய்ப்பு5 hours ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா5 hours ago

விக்ரமின் ‘தங்கலான்’ பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டம்!

சினிமா5 hours ago

‘பொன்னியின் செல்வன்2’: குந்தவைக்கு ட்வீட் செய்த வந்தியத்தேவன்!

சினிமா6 hours ago

மனைவியுடன் ஜாலி டூர் கிளம்பிய அஜித்! அப்போ ஏகே 62 அப்டேட் அவ்ளோ தானா?

சினிமா6 hours ago

பான் வேர்ல்ட் படமாகும் தங்கலான்; பா. ரஞ்சித்தின் மாஸ்டர் பிளான்!

சினிமா6 hours ago

அகநக அகநக முகநகையே! வெளியானது பொன்னியின் செல்வன் 2 பாடல்!

இந்தியா8 hours ago

மாணவியை காதலித்து திருமணம்.. ரூ.189000 கோடி நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர்..!

உலகம்8 hours ago

மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை எறும்புகள் கண்டுபிடித்துவிடுமா? மருத்துவர்களின் கண்டுபிடிப்பு

சினிமா9 hours ago

ரஜினியுடன் நடிக்க விரும்பும் கன்னட சூப்பர் ஸ்டார்!

தமிழ்நாடு10 hours ago

எம்ஜிஆர் கண்ட சின்னம் நம்பியார் கையில்… விளாசிய டிடிவி தினகரன்!

உலகம்7 days ago

சொந்த நாட்டில் வங்கி திவாலானது கூட தெரியாமல் என்ன செஞ்சீங்க? ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

சினிமா6 days ago

’நாட்டு நாட்டு’ நல்ல பாடலே இல்லை.. எல்லாமே லாபி.. இளையராஜா ரசிகர்கள் விளாசல்!

இந்தியா7 days ago

அதிக சம்பளத்தில் வேலை வேண்டாம்.. ராஜினாமா செய்து குறைந்த சம்பளத்திற்கு செல்லும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 days ago

சிலிக்கான் வங்கி திவாலால் பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள் எவை எவை?

இந்தியா6 days ago

முகேஷ் அம்பானி வீட்டு சமையல்காரருக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

சினிமா6 days ago

இனிமே பிரியங்கா மோகன் பக்கமே வரக்கூடாது; மனைவி போட்ட உத்தரவு நடிகையை மாற்றும் சிவகார்த்திகேயன்?

வணிகம்6 days ago

தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா (15/03/2023)!

வணிகம்7 days ago

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா(14/03/2023)!

உலகம்7 days ago

ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் விற்க முடியுமா? எவ்வளவுக்கு வாங்குவார்கள்?

இந்தியா6 days ago

3 நாட்கள் முதல் மனைவி, 3 நாட்கள் 2வது மனைவி.. ஞாயிறு அன்று தனிமை.. இளைஞரின் வித்தியாசமான வாழ்க்கை..!