செய்திகள்
சென்னை எம்.ஐ.டி யில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா…
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் மிகவும் அதிக பாதிப்பு காணப்படுகிறது. நேற்று ஒரு நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிலையத்தில் கடந்த 5ம் தேதி 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அங்கு சில மாணவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு இருந்ததை அடுத்து 1417 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பல மாணவர்களின் பரிசோதனை முடிவு வரவேண்டியிருப்பதால பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது. அதன்பின் மேலும் 45 பேருக்கு கொரொனா தொற்று உறுதியானது.
இந்நிலையில், தற்போது மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே மொத்தம் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவெனில் இதில் 90 சதவீதம் பேருக்கு ஓமைக்ரான் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.