Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: சுகாதாரத்துறையின் புதிய உத்தரவுகள்!

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 600 பேர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து தமிழக சுகாதாரத் துறை அதிரடியாக ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

தனிநபர் இடைவெளி, முகக்கவசம், உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகள் பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 100 முதல் 200 படுகைகளை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத் துறை சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுடன் தினசரி தொலைபேசி மூலம் பேசி அவர்களது உடல் நிலையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதையடுத்து ஆயிரத்துக்கு மேல் தாண்டினால் இன்னும் அதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?