சினிமா
கல்லூரி விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாணவர்; ஷாக்கிங் வீடியோ!
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கல்லூரி மாணவரின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் சட்டக் கல்லூரி ஒன்றில் தனது புதிய படமான தங்கம் படத்தின் புரமோஷனுக்காக நடிகை அபர்ணா பாலமுரளி படக்குழுவினருடன் சென்றிருந்தார்.
அப்போது மேடை ஏறி நடிகைக்கு பூ கொடுத்த கல்லூரி மாணவர் ஒருவர் உடனடியக நடிகை எதற்கும் வளைந்து கொடுப்பார் என்கிற தவறான எண்ணத்தில் அவரது தோளில் கை போட முயன்றார். உடனடியாக அந்த மாணவரின் செயல் பிடிக்காமல் நடிகை அந்த இடத்தில் இருந்து விலகி சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.
கல்லூரி மாணவரை சம்பவ இடத்திலேயே படக்குழுவினர் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஏன் கண்டிக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த மாணவரை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
அபர்ணா பாலமுரளிக்கு நடந்த இந்த அசெளகரியத்தை பார்த்து ஆத்திரப்பட்ட நடிகை மஞ்சிமா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆத்திரப்பட்டு பொங்கியபடி அந்த சம்பவத்தை கண்டித்துள்ளார்.
மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். சூர்யாவுடன் இணைந்து சூரரைப் போற்று படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த ஆண்டு வீட்ல விசேஷம், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களில் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.
மலையாளத்தில் அபர்ணா பாலமுரளி நடித்துள்ள தங்கம் திரைப்படம் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.