Connect with us

தமிழ்நாடு

ஏரிக்கு கீழே 120 அடி ஆழத்தில் சென்னை மெட்ரோ ரயில்.. ஜெர்மனியில் இருந்து வரும் வல்லுனர்கள்!

Published

on

சென்னையில் ஏற்கனவே முதல் கட்ட மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன என்பதும் இந்த மெட்ரோ ரயில்கள் சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் 2024 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் இயங்க தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயிலுக்காக சென்னை சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனை செய்ய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்து வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சேத்துப்பட்டு ஏரி அருகே சுரங்கப் பாதை அமைக்கும் பணி மிகவும் சவாலானதாக இருக்கிறது என்றும் இந்த பணிக்காக சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் சுரங்கப் பாதை அமைப்பது குறித்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சேத்துப்பட்டு ஏரியின் கீழ் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அதன் பின்னர் அங்கு மெட்ரோ ரயில் பாதை சுரங்க ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடையாறு ஆற்றின் கீழ் சென்னை கீழ்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அருகே சேத்துப்பட்டு ஏரியின் கீழ் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாகவும் தண்ணீருக்கு கீழே மெட்ரோ சுரங்க பாதை அமைக்கும் போது நீரின் அழுத்தத்திற்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் சேத்துப்பட்டு ஏரியின் கீழ் 120 அடி ஆழத்தில் இயங்க போகிறது என்ற தகவல் பொது மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?