Connect with us

தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் 10 நிமிடம் தாமதம்: என்ன காரணம்?

Published

on

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இரு தடங்களிலும் பத்து நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மெட்ரோ இரயில்‌ போக்குவரத்து சிமிக்கையில்‌ ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு வழித்தடங்களிலும்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ சென்று வருவதில்‌ சிறு தாமதம்‌ ஏற்படுகிறது. இந்த தொழில்நுட்ப கோளாறு உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. இதன்‌ காரணமாக நெரிசல்மிகு நேரத்திலும்‌ இரண்டு வழித்தடங்களில்‌ செல்லும்‌ மெட்ரோ இரயில்கள்‌ 10 நிமிடத்திற்கு ஒரு முறை சற்று தாமதமாக இயக்கப்படும்‌.

மெட்ரோ இரயிலில்‌ பயணிக்கும்‌ பயணிகளுக்கு எந்தவித இடையூறும்‌ இல்லாத வகையில்‌ மெட்ரோ இரயில்கள்‌ இயக்கப்படும்‌. இந்த சிமிக்கை கோளாறு உடனடியாக சரிசெய்யும்‌ பணியில்‌ தொழில்நுட்ப வல்லுனர்கள்‌ ஈடுப்பட்டு வருகிறார்கள்‌. இந்த சிமிக்கை கோளாறு மாலை 4.30 மணியளவில்‌ ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக கண்டறிந்து அதனை சீர்‌ செய்யும்‌ பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

மெட்ரோ பயணிகள்‌ தங்கள்‌ பயணத்தை வழக்கம்போல்‌ தொடரலாம்‌ என கேட்டுகொள்கிறோம்‌. மெட்ரோ இரயிலின்‌ 10 நிமிட தாமதத்திற்கு பயணிகள்‌ ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்‌. இந்த சிமிக்கை கோளாறு சரிசெய்த உடன்‌ மெட்ரோ இரயில்கள்‌ வழக்கம்போல்‌ இரு வழித்தடங்களிலும்‌ இயக்கப்படும்‌ என்பதை அன்புடன்‌ தெரிவித்துகொள்கிறோம்‌. இந்த தகவலை சென்னை மெட்ரோ இரயில்‌ நிர்வாகம்‌ தெரிவித்துள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?