Connect with us

தமிழ்நாடு

சென்னை மெட்ரோவில் பயணம் செய்தால் ரூ.1 லட்சம் பரிசு: அசத்தல் அறிவிப்பு!

Published

on

சென்னை மெட்ரோ இரயிலில்‌ பயணிக்கும்‌ பயணிகளுக்கு ரூ. 1 லட்சம்‌ மதிப்பிலான பரிசு கூப்பன்‌ அல்லது பரிசு பொருள்‌ வழங்கப்படும்‌ என்று சென்னை மெட்ரோ இரயில்‌ நிர்வாகம்‌ அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தி குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது: சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌, மெட்ரோ இரயில்‌ சேவையை 54.11 கி.மீ தூரத்திற்கு நீல வழித்தடத்தில்‌ விமான நிலையம்‌ மெட்ரோ முதல்‌ விம்கோ நகர்‌ பணிமனை மெட்ரோ இரயில்‌ நிலையம்‌ வரை மற்றும்‌ புரட்சித்தலைவர்‌ டாக்டர்‌. எம்‌.ஜி. ராமச்சந்திரன்‌ சென்ட்ரல்‌ மெட்ரோ முதல்‌ பரங்கிமலை மெட்ரோ நிலையம்‌ வரை தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார்‌ 10.50 கோடி பயணிகள்‌ மெட்ரோ இரயில்களில்‌ பயணம்‌ செய்துள்ளனர்‌.

இதுவரை மெட்ரோ இரயில்‌ சேவைகளைப்‌ பயன்படுத்தி, சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்திற்கு ஆதரவளித்து வரும்‌ பயணிகளை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, பின்வரும்‌ அற்புதமான திட்டங்களை அறிவிப்பதில்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌ மகிழ்ச்சி அடைகிறது. இந்த திட்டங்கள்‌, 21.03.2022 முதல்‌ அமலுக்கு வரும்‌.

1. ஒரு மாதத்தில்‌ அதிகபட்சமாக பயணம்‌ செய்யும்‌ முதல்‌ 1௦ பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன்‌ அல்லது பொருள்‌ வழங்கப்படும்‌ இதுதவிர மேலும்‌ 3௦ நாட்களுக்கான விருப்பம்போல்‌ பயணம்‌ செய்வதற்கான பயண அட்டை (ரூ.2500: மற்றும்‌ ரூ.50- வைப்புத்தொகை மதிப்புள்ள வழங்கப்படும்‌

2. மாதம்‌ ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500- மற்றும்‌ அதற்கு மேல்‌ பணம்‌ செலுத்திய 10 பயணிகளைத்‌ தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்டக்‌ குலுக்கல்‌ நடத்தப்படும்‌. அதில்‌ பயணிகளுக்கு தலா ரூ.3,000- மதிப்புள்ள பரிசு கூப்பன்‌ அல்லது பொருள்‌ வழங்கப்படும்‌

3. சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்தின்‌ பயண அட்டை வாங்கிய பயணிகளைத்‌ தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்டக்‌ குலுக்கல்‌ நடத்தப்படும்‌. மேலும்‌, இதில்‌ குறைந்தபட்சத்‌ தொகையான ரூ.500-க்கு டாப்‌ அப்‌ செய்திருந்தால்‌ ரூ.1,450- மதிப்புள்ள இலவச டாப்‌ அப்‌ மற்றும்‌ ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு கூப்பன்‌ அல்லது பொருள்‌ வழங்கப்படும்‌.

மேற்குறிப்பிட்ட திட்டங்கள்‌, பயணிகளை ஊக்குவிக்கவும்‌, பயனளிக்கவும்‌ சென்னை மெட்ரோ இரயிலில்‌ பயணிகள்‌ தங்களது பயணத்தை தொடர்ந்து பயணிக்க வேண்டும்‌.
இந்த பரிசு விவரங்களை மேலும்‌ தெரிந்துகொள்ள அனைத்து மெட்ரோ இரயில்‌ நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம்‌.

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?