தமிழ்நாடு
5 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் வெள்ளத்தில் தத்தளித்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அந்தமான் அருகே தோன்றியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் அரபிக்கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நேற்று தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது என்பதும் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இன்று ஐந்து மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ளது. ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.