Connect with us

தமிழ்நாடு

குலுங்கிய கோயம்பேடு.. காரில் ஏத்திட்டுபோய்.. கோலிவுட்டை மிஞ்சிய சம்பவம்.. அலறிய “பாபுஜி”

Published

on

சென்னை: சென்னை கோயம்பேடு அருகே நடந்த கொலை சம்பவம் ஒன்று போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த கொலை தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் பாபுஜி. இவர் வெங்கட்ராமன் என்ற நபரிடம் வேலை பார்த்து வந்தார். வெங்கட்ராமன் வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளார். முக்கியமாக சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு குறைந்த அளவு கடன் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில்  பாபுஜி இந்த கடை தொகைகளில் கையாடல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் வேலை பார்த்துக்கொண்டே இடையில் அவ்வப்போது பணத்தை பாபுஜி கையாடல் செய்து இருக்கிறார். அதோடு இல்லாமல் ஒருநாள் வெங்கட் ராமன் குழந்தையின் கழுத்தில் இருந்த செயினையும் திருடி இருக்கிறார்,. இப்படி செய்ததோடு இல்லாமல் அப்படியே வேலையை விட்டு நின்று உள்ளார்.

இதையடுத்து வெளியே பல ஆட்களிடம் வெங்கட்ராமன் குறித்து தவறாகவும் பேசி உள்ளார். அவரை பற்றி மோசமாக நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் கேள்விப்பட்ட வெங்கட்ராமன் தனது ஆட்கள் கோபி, கணபதி, திலீப் ஆகியோருடன் சென்று பாபுஜியுடன் சண்டை போட்டுள்ளார்.

கோயம்பேட்டில் பிரபல ஹோட்டல் ஒன்றில் பாபுஜி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். அவரை அப்படியே காரில் ஏற்றி சினிமாவில் காட்டுவது போல பல இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளனர். பல பகுதிகளில் சுற்றிவிட்டு கடைசியில் நூலம்பூர் என்ற பகுதியில் வைத்து அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

கத்தியால் குத்தியதில் இவர் உயிர் பிரிந்து உள்ளது. சினிமா பாணியில் இந்த கொலை நடந்து உள்ளது. முதலில் பாபுஜியை காணவில்லை என்று அவரின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். அதன்பின்தான் வெங்கட்ராமனிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலையை ஒப்புக்கொண்டார். அவருடன் கொலை செய்த மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்னும் 2 பேர் கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?