Connect with us

தமிழ்நாடு

நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம்: சென்னை கோயம்பேட்டில் மக்கள் அவதி!

Published

on

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னையில் 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது இவற்றில் சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். ஆகிய தொழிற்சங்கங்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக பேருந்துகள் மிகவும் குறைந்த அளவே இயங்குகிறது என்றும் குறிப்பாக சென்னையில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகத்திற்கு செல்வதற்காக கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் இதனால் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள், மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்க பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை மட்டுமின்றி மதுரை, விழுப்புரம், விருதுநகர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களிலும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

பேருந்துகள் இயங்காத காரணத்தால் ஆட்டோக்களில் கொள்ளை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் நாளையும் தொடரும் என்பதால் நாளையும் பொதுமக்கள் அவதி பட வேண்டிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?