தமிழ்நாடு
சென்னை அயோத்யா மண்டபம் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை அயோத்யா மண்டபத்தை சமீபத்தில் தமிழக அரசின் அறநிலையத் துறை எடுத்துக் கொண்ட நிலையில் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது .
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் கடந்த 1954ஆம் ஆண்டு கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த அமைப்பின் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது .
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது .
இந்த தீர்ப்பில் சென்னை அயோத்யா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் தர்காரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் அயோத்யா மண்டபத்தை அறநிலைத்துறை எடுத்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் அறநிலை துறை அதிகாரி நியமிக்கப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து ஸ்ரீராம் சமாஜ் நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.