தமிழ்நாடு
மூதாட்டியை தாக்கிய தலைமை காவலர் மீது வழக்கு பதிவு!

கன்னியாகுமரியில் மூதாட்டியை தாக்கிய தலைமை காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் சரசம் ( 65 ) இவரது மருமகள் அருகில் உள்ள கோவில் ஒன்றில் சமய வகுப்பு ஆசிரியை ஆக செயல்பட்டு வருகிறார்.
அதே கோவிலில் தக்கலை காவல் நிலையத்தில் தலைமை காவலர் ஆக பணியாற்றும் சிவ இளங்கோவன் என்பவரின் மனைவி அனிதா மலரும் சமய வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அனிதா மலருக்கும் மூதாட்டி சரசத்தின் மருமகளுக்கும் இடையே கோவிலில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அனிதா மலர் தனது கணவன் சிவா இளங்கோவனிடம் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காவலர் சிவா இளங்கோவன் தனது மனைவியுடன் மூதாட்டி சரசம் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் அவரை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் தலைமை காவலர் சிவா இளங்கோவன் மற்றும் அவரது மனைவி அனிதா மலர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.













